வெளி நாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களில் 834 பேர் மீட்பு

சென்னை: நெதர்லாந்தின் ஆம்ஸ்ட்ராம் நகரிலிருந்து 139 இந்தியர்களுடன் நேற்று முன்தினம் மாலை சிறப்பு மீட்பு விமானம் சென்னை வந்தது. இவர்களில் 2 பேர் இலவச தங்கும் இடத்திலும் 137 பேர் தனியார் ஓட்டலிலும் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சவுதி அரேபியாவின் தாமாமிலிருந்து சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு 162 இந்தியர்களுடன் சென்னை வந்தது. கத்தார் நாட்டின் தோகா நகரிலிருந்து 212 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. அமெரிக்காவின் சிகாகோ நகரிலிருந்து 56 இந்தியர்களுடன் டெல்லி வழியாக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தது. ஜப்பான் நாட்டின் டோக்கியோ நகரிலிருந்து 112 இந்தியர்களுடன் சிறப்பு மீட்பு விமானம் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை வந்தது. தாய்லாந்து நாட்டின் பாங்காக் நகரிலிருந்து நேற்று அதிகாலை சிறப்பு மீட்பு விமானத்தில் தனியார் நிறுவன ஊழியர்கள் 153 பேர் சென்னை நகர ஓட்டல்களுக்கு அனுப்பப்பட்டனர்.

Related Stories: