பொள்ளாச்சி: பொள்ளாச்சி சுற்றுவட்டாரத்தில் போதிய மழையில்லாததால், கிராமப்புற தடுப்பணைகளில் தண்ணீர் குறைவால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர். பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமங்களில் கடந்த ஜூன் மாதம் துவக்கத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியிலும், சில நாட்களுக்கு பின் பொள்ளாச்சி சுற்றுவட்டார பகுதியிலும் அவ்வப்போது மழை பெய்தது. இந்த மாதம் துவக்கத்தில் இரண்டு வாரமாக இரவு நேரத்தில் அவ்வப்போது மழை பெய்தது. ஆனால், அதன்பின் சுற்றுவட்டார கிராம பகுதிகளில் தென்மேற்கு பருவமழை சரியாக பெய்யவில்லை. இதன் காரணமாக, கிராமப்புறங்களில் உள்ள தடுப்பணைகளில் தண்ணீர் குறைந்து வறட்சியை நோக்கி செல்கிறது.