இரண்டு குழந்தைகளுடன் மனைவி மாயம்: கணவன் புகார்

திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் கிராஷ்(35). தனியார் தொழிற்சாலை ஒன்றில் செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இவருக்கு தமிழரசி(29) என்ற மனைவியும், சாதனா(10) என்ற மகளும், பபிரேஸ்(8) என்ற மகனும் உள்ளனர். இதில் தமிழரசியும் தனியார் தொழிற்சாலை ஒன்றில் லேடி செக்யூரிட்டியாக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், கடந்த இரு நாட்களுக்கு முன் கிராஷ் வேலைக்கு சென்று இரவு 8 மணிக்கு வீட்டுக்கு வந்து பார்த்தபோது, வீட்டில், மனைவி தமிழரசி மற்றும் இரண்டு குழந்தைகளும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பல இடங்களிலும், உறவினர்கள் வீடுகளிலும் தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. இதுகுறித்து கிராஷ் கொடுத்த புகாரின்பேரில் மப்பேடு போலீசார் வழக்குபதிந்து, இவர்களை யாராவது கடத்திச் சென்றனரா, வேறு காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.   

Related Stories: