சென்னை: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2வது நாளாக கனமழை பெய்துள்ளது. தென்மேற்கு திசையில் அதிகளவு காற்று வீசுவதால் உருவான மேகங்களாலும், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாகவும் சென்னையில் 2வது நாளாக மழை பெய்துள்ளது. இதில், அண்ணா நகர், போரூர், வடபழனி, இராமாபுரம், கிண்டி, அடையாறு மற்றும் மயிலாப்பூர் உள்ளட்ட இடங்களில் அதிகாலை முதலே விட்டு விட்டு மழை கொட்டி தீர்த்தது. இதேபோன்று சென்னையின் புறநகர் பகுதியிலும் கனமழை கொட்டி தீர்த்தது. இதில், தாம்பரம், மேடவாக்கம், பெருங்களத்தூர், கூடுவாஞ்சேரி, பூவிருந்தவல்லி, குன்றத்தூர், பொன்னேரி உள்ளிட்ட இடங்களிலும் கனமழை வெளுத்து வாங்கியது. மேலும், குரோம்பேட்டை பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கியதால் வாகனங்கள் ஊர்ந்து செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.