ஸ்ரீநகர் : ஜம்மு- காஷ்மீர் மாநில முன்னாள் முதல்வர் முஃப்தி முகமது சையத் மகளுக்கு மர்ம நபர்கள் தொலைபேசி மூலம் ஆபாசமாக மிரட்டல் விடுத்துள்ளனர். முஃப்தி முகமதின் மகள் டாக்டர்.ரூபையா, சென்னை கேசவப் பெருமாள் புரத்தில் வசித்து வருகிறார். இவரின் தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட மர்ம நபர்கள், அவரிடம் ஆபாசமாக பேசி மிரட்டல் விடுத்துள்ளனர். இது குறித்து அபிராமபுரம் காவல் நிலையத்தில் மிரட்டல் விடுத்த 3 செல்போன் எண்களுடன் ரூபையா புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து செல்போன் எண்ணை வைத்து, மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை சைபர் க்ரைம் போலீசார் தேடி வருகின்றனர்.
\