ராமேஸ்வரம்: ஒரு வார கால இடைவெளிக்குப் பிறகு கடலுக்கு மீன்பிடிக்க சென்ற மீனவர்கள் குறைந்தளவு மீன்பாடுடன் கரை திரும்பினர். மீன்வரத்து குறைவானதால் மீனவர்கள் பலரும் ஆயிரக்கணக்கில் நஷ்டம் ஏற்பட்டதாக தெரிவித்தனர்.
இலங்கை கடற்படை தாக்குதலில் இருந்து பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ராமேஸ்வரம் விசைப்படகு மீனவர்கள் கடந்த ஒரு வார காலமாக வேலைநிறுத்தம் செய்து வந்தனர். நேற்று முன்தினம் போராட்டத்தை வாபஸ் பெற்று மீன்பிடிக்கச் சென்றனர். அன்று காலையில் வழக்கம்போல் மீன்துறை அனுமதி டோக்கன் பெற்று 700க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில் மீனவர்கள் கடலுக்குச் சென்றனர். ஒரு வார கால இடைவெளிக்குப் பிறகு செல்வதால் நல்ல மீன்வரத்து இருக்கும் என்ற நம்பிக்கையில் சென்றனர்.