சென்னை: இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலைக்கு பிறகு இந்தி திரைப்பட உலகை ஆதிக்க சக்திகள் ஆட்டி படைப்பதாக தகவல்கள் வெளியாகின. இதனை உறுதிப்படுத்துவது போல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தனக்கு வரவேண்டிய இந்தி சினிமா வாய்ப்புகள் தடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியிருந்தார். திட்டமிட்டு ஒரு கும்பல் தனக்கு எதிராக சதி செய்வதாகவும் ரகுமான் தெரிவித்துள்ளார். இதையடுத்து, இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக பலரும் தங்களது கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். இந்நிலையில், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமானுக்கு ஆதரவாக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கருத்து தெரிவித்துள்ளார்.