பைக் மீது மினி பஸ் மோதி வருவாய் ஆய்வாளர் பலி

திருவள்ளூர்: திருவள்ளூர் அருகே பைக் மீது மினிபஸ் மோதிய விபத்தில்,சம்பவ இடத்திலேயே வருவாய் ஆய்வாளர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அடுத்த மணவாள நகர் கபிலர் நகர் பகுதியை சேர்ந்தவர்

கண்ணப்பன்(46). இவர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வருவாய் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 25ம் தேதி பணி முடிந்து, தனது பைக்கில் கலெக்டர் அலுவலகத்தில் இருந்து வீடு நோக்கி சென்றார். பெரியகுப்பம் ரயில்வே

மேம்பாலம் மீது செல்லும்போது, பின்னால் வேகமாக வந்த மினி பஸ், எதிர்பாராதவிதமாக பைக் மீது மோதியது. இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த கண்ணப்பன், உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். தகவலறிந்து சம்பவ

இடத்துக்கு திருவள்ளூர் டவுன் போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பரிசோதனைக்காக திருவள்ளூர் தலைமை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுகுறித்து திருவள்ளூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து

வருகின்றனர்.

Related Stories: