ராஜபாளையம்: ராஜபாளையம் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் விவசாயிகள் தற்போது மானாவாரி பயிரான பயறு வகைகள் மற்றும் எண்ணெய் வித்துக்களை விளையவைத்துள்ளனர். ஆனால், அவற்றை உலர வைக்க விவசாயிகளுக்கு உலர்களம்இல்லை. இதனால் தார்ச்சாலையை உலர்களமாக்குவதுடன், பயிர்களை பிரித்தெடுத்து விட்டு குப்பைகளை அகற்றாததுடன், சிலர் தீவைத்து விட்டுச் செல்கின்றனர்.
இதனால் அவ்வழியே வரும் வாகனஓட்டிகள் பாதிக்கப்படுகின்றனர். அத்துடன் தீ வைக்கப்படுவதால் தார்ச்சாலைகள் சேதமடைந்து வருகின்றன.