தமிழக மீனவர்களுக்கு நடுக்கடலில் அரிவாள் வெட்டு: கடற்கொள்ளையர்கள் அட்டூழியம்

வேதாரண்யம்: நாகை மாவட்டம் ஆறுகாட்டுத்துறையை சேர்ந்த மீனவர்கள் 5 பேர் பைபர் படகில் நேற்று மதியம் மீன்பிடிக்க கடலுக்கு சென்றனர். 7 நாட்டிக்கல் மைல் தூரத்தில் மீன் பிடித்து கொண்டிருந்தனர். அப்போது, படகில் வந்த இலங்கை கடல் கொள்ளையர்கள் அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் 4 பேரையும் தாக்கினர். இதில் பாரதிதாசன் என்பவருக்கு தலை மற்றும் கையில் அரிவாள் வெட்டு விழுந்தது. மற்ற மூவருக்கும் லேசான காயம் ஏற்பட்டது. நேற்று இரவு 8.30 மணியளவில் கரை திரும்பிய நான்கு பேரையும் சக மீனவர்கள், வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Related Stories: