சென்னை: நடிகை வனிதா குறித்து அவதூறாக பேசியதாக கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்ட சூர்யா தேவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கும் நிலையில், குடும்பத்துடன் தலைமறைவான அவரை மாநகராட்சி அதிகாரிகள் தீவிரமாக தேடி வருகிறார்கள். நடிகை வனிதா விஜயகுமார் 3வது திருமணம் செய்து கொண்டதை சமூக வலைத்தளங்களில் விமர்சித்ததாக சூர்யா தேவி என்பவரை வடபழனி மகளிர் காவல்நிலைய போலீசார் அண்மையில் கைது செய்தனர். தொடர்ந்து, நீதி மன்றத்திற்கு கொண்டு செல்வதற்கு முன்பாக சூர்யா தேவி மற்றும் அவரை கைது செய்த ஆய்வாளர் ரேணுகா தேவிக்கும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.