கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக செயலாற்றிய பாலசுப்ரமணியம் ஐஏஎஸ்..மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம்!

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தலைமைச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் நிறுத்தம் என உத்தரவு வெளியானதாக கூறப்பட்ட நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து விதமான கடன்கள் வழங்குவதை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.

இதனால் வங்கிகளில் நகைக் கடன் வழங்கப்படுவதில்லை என விவசாயிகளும், பொதுமக்களும் புகார் கூறினர். கொரோனா காலத்தில் விவசாயிகள், வியாபாரிகள், சிறு தொழில் நடத்துவோர் உள்ளிட்ட அனைத்து ஏழை, நடுத்தர மக்கள் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவிக்கின்றனர். தனியார் கந்துவட்டி கும்பல் இந்த நிலையில் நகைக் கடன்கள் மூலம் ஓரளவு தங்கள் தேவைகளை நிறைவேற்றி வருகின்றனர். இதையும் பறிக்கும் வகையில் தற்போது நகைக் கடன்கள் நிறுத்தப்பட்டுள்ளது, என பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் கண்டனங்களை பதிவு செய்திருந்தனர். இதையடுத்து, கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடனை நிறுத்துமாறு எந்த சுற்றறிக்கையும் வெளியிடப்படவில்லை என கூறி தமிழக அரசு இந்த விவாகரத்திற்கு முற்றுப்புள்ளி வைத்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories: