சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், மாநில தேர்தல் ஆணைய செயலாளராக இருந்த சுப்பிரமணியன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்படுவதாக தலைமைச்செயலாளர் சண்முகம் அறிவித்துள்ளார். கூட்டுறவு வங்கிகளில் நகை கடன் நிறுத்தம் என உத்தரவு வெளியானதாக கூறப்பட்ட நிலையில் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் மாற்றப்பட்டுள்ளார். முன்னதாக ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டில் கூட்டுறவு வங்கிகள் செல்ல உள்ள நிலையில் மறு உத்தரவு வரும் வரை அனைத்து விதமான கடன்கள் வழங்குவதை நிறுத்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது.
கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக செயலாற்றிய பாலசுப்ரமணியம் ஐஏஎஸ்..மாநில தேர்தல் ஆணைய செயலாளராக நியமனம்!
- பாலசுப்பிரமணியம் ஐ.ஏ.எஸ்
- கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் பாலசுப்பிரமணியம்
- கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஐ.ஏ.எஸ்
- தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம்