சென்னை: பட்டா மாறுதல் சம்மந்தமான மனுக்களை நேரடியாக வழங்குவதை தவிர்த்து, இணையம் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் பதிவேற்றம் செய்வது வரும் 31ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது என்று மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை: சென்னை மாவட்டத்தில் புதிதாக இணைக்கப்பட்ட 6 வட்டங்களுக்கு மட்டும் 1429ம் பசலிக்கான வருவாய் தீர்வாய கணக்கு முடிப்பு சோழிங்கநல்லூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியராலும், மதுரவாயல் வட்டாட்சியர் அலுவலகத்தில் மாவட்ட வருவாய் அலுவலராலும், திருவொற்றியூர், அம்பத்தூர், ஆலந்தூர் மற்றும் மாதவரம் ஆகிய வட்டங்களில் சம்மந்தப்பட்ட வருவாய் கோட்ட அலுவலர்களாலும் ஜூன் 29ம் தேதி முதல் தொடங்கி 30ம் வரை நடத்தப்பட்டது.