சென்னை: அதிமுகவில் முக்கிய நிர்வாகிகள் அவரவர் வகித்து வந்த பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓபிஎஸ் அறிவித்துள்ளனர். அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அதிமுக அமைப்புச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் சோமசுந்தரம் மற்றும் அமைப்புச் செயலாளர், இளைஞர் பாசறை, இளம் பெண்கள் பாசறைச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் பரஞ்ஜோதி, காஞ்சிபுரம் மேற்கு மாவட்டக் செயலாளர் பொறுப்பில் இருக்கும் வாலாஜாபாத் கணேசன், நீலகிரி மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் புத்திச்சந்திரன் ஆகியோர் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகின்றனர்.