சென்னை: காய்ச்சல் அறிகுறி இருந்தால் டெங்கு மற்றும் கொரோனா பரிசோதனை கட்டாயம் மேற்ெகாள்ள வேண்டும் என்று மருத்துவமனைகளுக்கு அறிவுறுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும், சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளது. மழைக்காலம் தொடங்கிய நிலையில் சென்னையில் டெங்கு காய்ச்சல் பரவ தொடங்கியுள்ளது. 3 நாட்களுக்கு முன் நங்கநல்லூரைச் சேர்ந்த 3 வயது சிறுமி டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு மரணம் அடைந்தார். இந்நிலையில் தமிழகம் முழுவதும் டெங்கு தடுப்பு நடவடிக்கை பணிகளை தீவிரப்படுத்த அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை குறித்து, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளுக்கு சுகாதாரத்துறை சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.