நெய்வேலி: நெய்வேலி என்எல்சி இந்தியா நிறுவனத்தின் ஜவகர் சிபிஎஸ்இ மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவி ஓவியா சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு தேர்வை கணினி வழியில் எழுதி 500க்கு 447 மதிப்பெண்கள் பெற்றுள்ளார். பார்வை குறைபாடுள்ள மாணவர்கள் கணினி வழியாக தேர்வுகளை எழுதலாம் என சிபிஎஸ்இ அனுமதியளித்த நிலையில், தமிழகத்தில் கணினி வழியில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதி வெற்றி பெற்ற முதல் பார்வையற்ற மாற்றுத்திறன் மாணவி என்ற பெருமையை ஒவியா பெற்றுள்ளார்.