ஈரோடு: ஈரோடு கருங்கல்பாளையம் திருநகர் காலனி பகுதியைச் சேர்ந்தவர் சையத்ஹாரூன் (69). இவர், கடந்த 41 ஆண்டுகளாக சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றி வருகிறார். தற்போது, கொரோனா ஊரடங்கால் நீதிமன்றங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால், வழக்கறிஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு நீதிமன்றங்களை திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஈரோடு திருநகர் காலனி பகுதியில் இருந்து நேற்று வழக்கறிஞர் உடையில் சைக்கிளில் வீதி, வீதியாக சென்று டீ விற்றார். திருநகர் காலனியில் துவங்கி மூலப்பட்டறை, கே.என்.கே. ரோடு, பஸ் ஸ்டாண்ட், மேட்டூர் ரோடு, நசியனூர் ரோடு, சம்பத் நகர் வழியாக நீதிமன்ற வளாகம் வரை சென்று டீ விற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டார்.