திருவள்ளூர்: திருவள்ளூர் நகராட்சிக்கு உட்பட்ட பெரியகுப்பம் பகுதியில் திருவள்ளூர் டவுன், திருவள்ளூர் தாலுகா, மணவாளநகர், கடம்பத்தூர் ஆகிய காவல் நிலையங்களில் பணிபுரியும் போலீசாருக்கு குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இக்குடியிருப்புகள், 1999ம் ஆண்டு, அக். 20ம் தேதி திறக்கப்பட்டன. இங்கு, மூன்று இன்ஸ்பெக்டர்கள், 12 எஸ்.ஐக்கள் மற்றும், 120 போலீசார் தங்களது குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். இந்த காவலர் குடியிருப்புகளில் இருந்து கழிவுநீர் வெளியேற வசதியாக கழிவுநீர் கால்வாய்கள் அமைக்கப்பட்டுள்ளன. இக்கால்வாய்களை தினசரி நகராட்சி துப்புரவு பணியாளர்கள் வந்து சீர் செய்ய வேண்டும்.