ஆவடி: ஆவடி அடுத்த வீராபுரம், கோலாச்சியம்மன் நகரை சேர்ந்தவர் சௌந்தரராஜன் (40). தனியார் கம்பெனி ஊழியர். கடந்த 22ம் தேதி வீட்டை பூட்டி விட்டு குடும்பத்துடன் வந்தவாசியில் உள்ள தம்பி வீட்டுக்கு சென்றார். நேற்று முன்தினம் அவரது வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டு திறந்து கிடந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த அவர் வந்து பார்த்தபோது, பீரோவில் இருந்த 7 சவரன் நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. இதேபோல், ஆவடி அடுத்த வீராபுரம், மீனாட்சி கார்டன் பகுதியை சேர்ந்தவர் உமாசங்கர் (40). ஆவடி மாநகர போக்குவரத்து கழகத்தில் நடத்துனர்.