குன்றத்தூர்: மாங்காடு அருகே சிக்கராயபுரம், குன்றத்தூர்- மாங்காடு பிரதான சாலையில் தனியாருக்கு சொந்தமான கல்லூரி ஒன்று உள்ளது. இங்கு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில், சிறப்பு சிகிச்சை மையம் காஞ்சிபுரம் மாவட்ட நிர்வாகம் சார்பில் தற்காலிகமாக அமைக்கப்பட்டுள்ளது. இங்கு 50க்கும் மேற்பட்ட கொரோனா நோயாளிகள் தங்கி சிகிச்சை பெறுகின்றனர். இங்கு தங்கியுள்ள நோயாளிகளுக்கு சிகிச்சை, முறையாக இல்லை. மருந்து, உணவு உள்பட அத்தியாவசிய பொருட்கள் முறையாக வழங்கவில்லை. போதிய குடிநீர் மற்றும் கழிவுநீர் வசதி செய்து தரவில்லை என கூறப்படுகிறது. இதுகுறித்து நோயாளிகள் சார்பில், அரசுக்கு பலமுறை புகார் தெரிவித்தும்த, எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை.