பூந்தமல்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வை கண்டித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பினர் மதுரவாயல் அடுத்த வானகரத்தில் நேற்று நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். சங்க தலைவர் யுவராஜ் தலைமை வகித்தார். இதுகுறித்து யுவராஜ் கூறுகையில், “தற்போது ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தொடர்ந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதனால் வாகன உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்தநிலை தொடருமானால் மோட்டார் வாகன தொழில் முற்றிலும் அழிந்து விடும் அபாயம் உள்ளது.