சென்னை: பிளஸ் 2 தேர்வு முடிவுகள் கடந்த 16ம் தேதி வெளியானது. இதையடுத்து, மாணவர்களுக்கான மதிப்பெண் சான்றுகளை 24ம் தேதி முதல் அந்தந்த பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் இணைய தளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து வைத்துக் கொண்டு மாணவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சரிபார்த்து கையெழுத்திட்டு வைத்துக் கொள்ள வேண்டும் என்றும், 25ம் தேதி முதல் மதிப்பெண் பட்டியல்களை வினியோகம் செய்ய வேண்டும் என்றும் தேர்வுத்துறை அறிவித்து இருந்தது.