புதுடெல்லி: லடாக் எல்லையில் இருந்து விரைவாகவும், முழுமையாகவும் இருநாட்டு ராணுவத்தையும் வாபஸ் இந்தியாவும், சீனாவும் முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கிழக்கு லடாக் எல்லையில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் சீன ராணுவம் நடத்திய கொடூர தாக்குதலில் இந்திய வீரர்கள் 20 பேர் வீர மரணம் அடைந்தனர். இதைத் தொடர்ந்து, இருநாடுகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. எல்லையில் இருநாட்டு ராணுவமும் தங்களின் படைகளை குவித்துள்ளன. இந்த பிரச்னையை தீர்ப்பதற்கு, இருநாட்டு ராணுவம் மற்றும் தூதரக அதிகாரிகள் மட்டத்தில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.