தமிழகம் முழுவதும் 11 பிஆர்ஓக்கள் மாற்றம்

சென்னை: தமிழகம் முழுவதும் 11 மக்கள் தொடர்பு அதிகாரிகள் மாற்றப்பட்டுள்ளனர். இது குறித்து தமிழக அரசு நேற்று வெளியிட்ட உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஏபிஆர்ஓக்களாக இருந்த 6 பேர் பிஆர்ஓக்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர். சிவகங்கை பி.எஸ்.கருப்பண்ண ராஜவேல் விருதுநகர் மாவட்டம், தஞ்சாவூர் மண்டபம் இளமுருகு சென்னை தலைமை செயலக வரவேற்பு, கரூர் கே.செந்தில்குமார் திருப்பூர் மாவட்டம், கள்ளக்குறிச்சி லோகநாதன் விழுப்புரம் மாவட்டம், கிருஷ்ணகிரி ஏ.எஸ்.மோகன் வேலூர் மாவட்டம், திண்டுக்கல் நாகராஜ பூபதி பெரம்பலூர் மாவட்டத்துக்கும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலராக பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

Related Stories: