திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் நடைபெறும் விழாக்களில், ஆடிப்பூர பிரம்மோற்சவமும் பிரசித்தி பெற்றதாகும். நாளை தொடங்கும் விழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இதற்காக நாளை அதிகாலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் அம்மன் சன்னதி எதிரே உள்ள தங்க கொடிமரத்தில் கொடியேற்றப்பட உள்ளது. மாலை 5 மணி அளவில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம், அலங்காரம், தீபாராதனை மற்றும் வளைகாப்பு நடைபெறும். வரும் 2ம் தேதி வரை தினமும் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடைபெறும்.