சென்னை: கொரோனாவால் கார் டிரைவரான தந்தைக்கு வருமானம் இல்லாததால், குடும்ப வறுமையை போக்க டீ விற்ற பள்ளி 5வது மாடியில் இருந்து தவறி கீழே விழுந்து இறந்தான். சென்னை மண்ணடி மூர் தெருவை சேர்ந்தவர் ஜாகிர் உசேன். கார் டிரைவர். இவரது மகன் ரியாஸ் (15), அதே பகுதியில் 9ம் வகுப்பு பயின்று வந்தான். கொரோனா ஊரடங்கால் ஜாகிர் உசேனுக்கு வேலை இல்லாததால் குடும்பம் நடத்த பணமின்றி தவித்து வந்தார். குடும்ப வறுமையை கருத்தில் கொண்டு, அவரது மகன் ரியாஸ், வீட்டில் டீ தயாரித்து, அப்பகுதியில் விற்பனை செய்து வந்துள்ளான். அதில் கிடைக்கும் சொற்ப வருமானத்தை வைத்து குடும்பத்தினர் வாழ்க்கையை கடத்தி வந்தனர்.