சென்னை: கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடித்து இருப்பதாகவும், அதை அரசு ஏற்க மறுப்பதாகவும் கூறி சித்த மருத்துவர் திருத்தணிகாசலம் சமூக வலைதளங்களில் வீடியோ பதிவிட்டார். இந்நிலையில், திருத்துணிகாசலம் போலியான சித்த மருத்துவர், பதிவு செய்யாதவர் என இந்திய மருத்துவத்துறை மற்றும் ஓமியோபதி கவுன்சில் சார்பில் மத்திய குற்றப்பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில், போலீசார், திருத்தணிகாசலத்தை கைது செய்தனர்.
பின்னர், குண்டர் தடுப்பு சட்டத்திலும், மேலும் 2 புதிய வழக்குகளிலும் கைது செய்யப்பட்டார்.