ராம் அவதேஷ் சிங் மறைவு; சமூகநீதிக்கு பேரிழப்பு: ராமதாஸ் இரங்கல்

சென்னை: பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தி:

லோக்தளம் கட்சியின் தலைவரும், பிற்படுத்தப்பட்டோர் நலனுக்காக தமது வாழ்வை அர்ப்பணித்துக் கொண்டவருமான ராம் அவதேஷ் சிங் பட்னாவில் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன். தந்தை பெரியார் மீது கொண்ட பற்று காரணமாக வட இந்தியாவில் அவரது கொள்கைகளை பரப்பியவர். அதனால் வட இந்திய பெரியார் என்றழைக்கப்பட்டவர். அவரது மறைவு சமூகநீதிக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: