மாடியில் இருந்து விழுந்த சிறுவன் பலி

பூந்தமல்லி: சென்னை கொடுங்கையூர் எழில் நகர் 7வது தெருவைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு. எலக்ட்ரீசியன். இவரது மகன் அரி சங்கர் (15). ராமாபுரம், கம்பர் சாலையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடத்தில் தந்தையுடன் வேலை செய்து வந்தான். அப்போது முதல் தளத்தில் இருந்து தவறி கீழே விழுந்தான். அக்கம் பக்கத்தினர்  மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். நேற்று முன்தினம் நள்ளிரவு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தான்.

Related Stories: