சென்னை: முத்தூட் பைனான்ஸ் லிமிடெட், அதன் குழுவான முத்தூட் எம் ஜார்ஜ் அறக்கட்டளை சார்பில், முத்தூட் விவாஹசம்மானம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இதன்மூலம், சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் 2020 ஆகஸ்ட் - டிசம்பர் மாதங்களுக்கு இடையில் திருமணம் செய்யும், பொருளாதாரத்தில் பின்தங்கிய விதவை தாய்மார்களின் மகள்கள் 20 பேருக்கு தலா ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். இவர்களின் மாத வருமானம் ரூ.10,000க்கும் குறைவாக இருக்க வேண்டும். இதுகுறித்து முத்தூட் பைனான்ஸ் லிமிடெட் நிறுவன செயல் இயக்குநர் ஜார்ஜ் எம்.ஜேக்கப் கூறுகையில், “இந்த உதவியை பெற தகுதியான பெண்களின் தாய்மார்கள் உள்ளூர் கவுன்சிலர் அல்லது பஞ்சாயத்து உறுப்பினர் அல்லது எம்எல்ஏ சான்றளிப்பு கடிதத்துடன் ஒரு விண்ணப்பம் மற்றும் திருமண அழைப்பிதழை இணைத்து வழங்க வேண்டும்.