சென்னை: சென்னைப் பல்கலைக் கழகம் நடைமுறைப்படுத்தி வரும் இலவச கல்வித்திட்டதின் கீழ் படிக்க விரும்புவோர் 22ம் தேதி முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என்று சென்னைப் பல்கலைக் கழகம் அறிவித்துள்ளது. இது குறித்து சென்னைப் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஏழை மாணவர்கள் இளநிலை படிப்புகளில் சேர்ந்து பயன்பெறும் வகையில் சென்னைப் பல்கலைக் கழகம் கடந்த 2011ம் ஆண்டு முதல் சென்னைப் பல்கலைக் கழக கல்வித் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த கல்வித் திட்டத்தின் கீழ், 2020-2021ம் கல்வி ஆண்டில் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் உள்ள சென்னைப் பல்கலையில் இணைப்பு பெற்ற சுயநிதி மற்றும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம்.