சத்தியபாமாவின் வளாக ஆட்தேர்வு வரலாற்றில் ஒரு புதிய மைல்கல் பதித்துள்ளது. இறுதியாண்டு பி.டெக்-தகவல் தொழில்நுட்பம் மாணவர் ஆதர்ஷ் ஆண்டுக்கு 41 லட்சம் ரூபாய் சம்பளத்தில் திவேர்டா நிறுவனத்தால் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இதுவரை சத்தியபாமா மாணவர்கள் பெற்றதிலேயே இதுதான் உயர்ந்தபட்ச அளவாகும். பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் மரியஜீனா ஜான்சன் மற்றும் தலைவர் டாக்டர் மரிய ஜான்சன் மாணவரை பாராட்டி ஊக்கப்படுத்தினர். சத்தியபாமா பல்கலைக்கழகத்தின் 90 சதவீதத்திற்கு மேலான மாணவர்கள் இதுவரை (15.7.20 தேதிப்படி) 231 நிறுவனங்களால் ஏற்கனவே பணியமர்த்தப்பட்டுள்ள ஒரு மிகவும் அழுத்தமான சாதனை பதிவை பராமரித்து வருகிறது. இன்னும் வாய்ப்புகளை வழங்கும் பல ஆட்தேர்வர்கள் உள்ளனர். மீதி மாணவர்களையும் பணியமர்த்துவதில் பயிற்சி நிலையம் உறுதியாக உள்ளது.