பொன்னேரி: பொன்னேரி பழைய பேருந்து நிலையம் அண்ணா சிலை அருகே பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் கொரோனா நோய் தடுப்பு விழிப்புணர்வு பிரச்சாரம் நேற்று நடந்தது. இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு மாநில செயற்குழு உறுப்பினர் ஆர்.எம்.ஆர்.ஜானகிராமன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர் பத்மநாபன், மாநில பொதுச்செயலாளர் இருசப்பன், வெளிமாநில தொடர்பு மாவட்ட தலைவர் பிரகாஷ் சர்மா, பொன்னேரி நகர பொறுப்பாளர் நந்தன், தாமரை சோமு சங்கர், மோகன், கோட்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.