சென்னை: மயிலாப்பூர் துணை கமிஷனராக பணியாற்றிய தேஷ்முக் சேகர் சஞ்சய் கொரோனா தொற்றில் இருந்து குணமடைந்து சமீபத்தில் பணியில் சேர்ந்தார். இதனிடையே, போலீஸ் உயர் அதிகாரிகள் பலர் இடமாற்றம் செய்யப்பட்டனர். அதன்படி, சைபர் கிரைம் துணை கமிஷனராக இருந்த செஷாங் சாய் மயிலாப்பூர் துணை கமிஷனராக பதவி ஏற்றார். பணியில் சேர்ந்த ஒரு வாரத்தில் அவருக்கு காய்ச்சல், சளி இருந்ததால், கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.