மாநகர செய்தி துளிகள்...

போக்சோவில் வாலிபர் கைது: 17 வயது சிறுமியை காதலித்து, திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கர்ப்பமாக்கிய தண்டையார்பேட்டை வினோபா நகரை சேர்ந்த சந்துரு (21) என்பவரை போக்ேசா சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

மதுவில் ஆசிட் கலந்து குடித்தவர் சாவு: யானைகவுனி ஜக்காபுரத்தை சேர்ந்த கவுதம் (24), நேற்று மதுபானம் அருந்தியபோது, தண்ணீர் என நினைத்து ஆசிட்ைட கலந்து குடித்ததால் பரிதாபமாக இறந்தார்.

கொலை வழக்கில் 5 பேர் கைது: ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்த செல்வம் (50) என்பவரை முன்விரோத தகராறில் வெட்டிக்கொன்ற வழக்கில், அதே பகுதியை சேர்ந்த அஞ்சலி (45), அவரது மகன் குறளரசன் (22) உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், இதில் தொடர்புடைய பெரும்பாக்கம் ஜான் (30), பள்ளிக்கரணை முத்து (26) தாம்பரம் ஜெயக்குமார் (24), கார்த்திக் (24), ஆதம்பாக்கம் விக்கி (26) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

செல்போன் கடையில் கொள்ளை: அம்பத்தூர் கிருஷ்ணாபுரம் சிடிஎச் சாலையில் உள்ள செல்போன் கடையின் பூட்டை உடைத்து விலை உயர்ந்த 30 செல்போன்களை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றனர்.

6 ரவுடிகள் பிடிபட்டனர்: வில்லிவாக்கத்தை சேர்ந்த ரவுடிகள் எபினேசர், அப்ரோஸ் ஆகியோரை முன்விரோத தகராறில் அரிவாளால் வெட்டிய வழக்கில், என்எஸ்கே நகரை சேர்ந்த ரவுடிகள் கார்த்திக் (24), வில்லிவாக்கம் சந்தோஷ் (23), அண்ணாநகர் விஜய் (24), கார்த்திக் (21), அரும்பாக்கம் பிரபு (23), தினகரன் (30) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

கஞ்சா கடத்தியவர் கைது: மாதவரத்தில் இருந்து போரூருக்கு பைக்கில் கஞ்சா கடத்திய ெகாடுங்கையூர் ஆதிவாசி காலனியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (எ) சஞ்சய் (18) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

தலைமறைவு ரவுடி சிக்கினார்: வீட்டின் முன்பு கார் நிறுத்திய தகராறில் கோயம்பேடு பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஜோன்ஸ் (40) என்பவரை இரும்பு ராடால் தாக்கிவிட்டு தலைமறைவான அதே பகுதியை சேர்ந்த ரவுடி தியாகராஜன் (41) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

வீடு புகுந்து திருடியவர் சுற்றிவளைப்பு: பெருங்குடி பகுதியில் வீடுகளில் புகுந்து திருடிவந்த நீலாங்கரை கெனால்புரத்தை சேர்ந்த முருகன் (20) என்பவரை போலீசார் கைது செய்து, அவரிடம் இருந்து 5 சவரன் நகை, 250 கிராம் வெள்ளி ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

மாவா விற்ற பெண் கைது: புதுவண்ணாரப்பேட்டை சுனாமி குடியிருப்பில் மதுபானம் மற்றும் மாவா விற்ற ராதிகா (25) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories: