ரூ80 லட்சம் மதுபாட்டில்கள் ஜேசிபி மூலம் அழிப்பு

திருமலை: ஆந்திர மாநிலத்தில் மதுவிலை 200 மடங்கு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மதுப்பிரியர்களுக்கு தேவையான பிராண்டட் மதுபாட்டில்கள் கிடைக்காமல் போனது. இதனால், தெலங்கானா மாநிலத்தில் இருந்து, விலை குறைவு மற்றும் பிராண்டட் மதுபாட்டில்கள் வாங்கி வந்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால், மதுபாட்டில்களை வாங்கி கடத்தும் கும்பல் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

போலீசாரும் பல மாவட்டங்களில் கடத்தல் மதுபானங்களை பறிமுதல் செய்து வருகின்றனர். அதன்படி, கிருஷ்ணா மாவட்டத்தில் ரூ80 லட்சம் மதிப்புள்ள 14,210 மதுபாட்டில்களை போலீசார் கடந்த சில நாட்களுக்கு முன் பறிமுதல் செய்தனர். இந்த மதுபாட்டில்களை காவல்துறை ஆயுதப்படை மைதானத்தில் சிறப்பு அதிரடிப்படை இயக்குனர் சி.எச்.ராமகிருஷ்ணா தலைமையில் நேற்று பொக்லைன் இயந்திரம் மூலமாக அழித்தனர்.

Related Stories: