ஆவடி: இந்திய உணவு கழகத்தில் பெண் தூய்மைப் பணியாளருக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தார்.ஆவடி அடுத்த பட்டாபிராம், தண்டுரை, கங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் குமார். இவர், கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவரது மனைவி பார்வதி (40). இந்திய உணவு கழகத்தில் தூய்மைப்பணி ஊழியர்.இந்நிலையில், பார்வதி, நேற்று முன்தினம் அலுவலகத்தில் தூய்மைப்பணிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது, அவருக்கு திடீரென்று மூச்சுத்திணறல் ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்தார். இதனை கண்ட சக ஊழியர்கள் அதிர்ச்சியடைந்து அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவரை சிகிக்சைக்காக சேர்த்தனர்.