குடியாத்தம்: குடியாத்தத்தில் இலவச வீட்டு மனை பட்டா கேட்டு நரிக்குறவர்கள், கோட்டாட்சியரிடம் மனு அளித்தனர். குடியாத்தம் அடுத்த அகரம்சேரி பகுதியில் 50க்கும் மேற்பட்ட நரிக்குறவர் குடும்பத்தினர் 200க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். இவர்கள் பஸ் நிலையம், தெரு மற்றும் கோயில் திருவிழாக்களில் பலூன், பொம்மை, ஊசி, மணி போன்றவற்றை விற்பனை செய்து வருகின்றனர். இவர்களுக்கு அரசு சார்பில் இலவச வீட்டு மனை பட்டா மற்றும் வீடு வழங்க வேண்டும் என பல வருடங்களாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.