பூந்தமல்லி: போரூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் தலைமைக்காவலர் ஆகியோர் ஊரடங்கு காலத்தில் பணியாற்றியபோது, அவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால் சிகிச்சை பெற்று வந்தனர். இருவரும் பூரண குணமடைந்து நேற்று பணிக்கு திரும்பினார். தொடர்ந்து, காவல் நிலையத்திற்கு வந்த இருவருக்கும் சிவப்பு கம்பளம் வரவேற்பளித்து, மலர் தூவி, பூங்கொத்து கொடுத்து, ஆரத்தி எடுத்து, மேள, தாளங்கள் முழங்க போரூர் போலீசார் வரவேற்றனர். மேலும், மற்ற போலீசாருக்கும் கொரோனா தடுப்பு நடவடிக்கை மற்றும் நோய் எதிர்ப்பு சக்திக்காக கடலை, முட்டை வழங்கப்பட்டது.