குன்றத்தூரில் வாகன சோதனையில் வெடிகுண்டு, அரிவாளுடன் சிக்கிய வாலிபர் கைது

குன்றத்தூர்: குன்றத்தூரில் நேற்று நாட்டு வெடிகுண்டு மற்றும் அரிவாளுடன் மோட்டார் சைக்கிளில் சுற்றி வந்த வாலிபரை வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் கைது செய்தனர். குன்றத்தூர் போலீசார், கரைமா நகர் சோதனை சாவடியில் நேற்று வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே சந்தேகத்திற்கிடமாக வந்த மொபெட்டை சோதனை செய்தனர். மொபெட்டின்  சீட்டுக்கு அடியில் நாட்டு வெடிகுண்டு, கஞ்சா பொட்டலங்கள் மற்றும் அரிவாள் இருப்பது தெரியவந்தது. அதிர்ச்சியடைந்த போலீசார், அந்த நபரை குன்றத்தூர் காவல் நிலையம் அழைத்துச் சென்றனர்.  

விசாரணையில், சென்னை, எண்ணூரைச் சேர்ந்த ரிச்சர்ட் அபிஷேக் ராஜ் (23) என்பதும், இவர் அனகாபுத்தூரைச் சேர்ந்த ஜோயல் என்பவரிடமிருந்து நாட்டு வெடிகுண்டு, கஞ்சா ஆகியவற்றை வாங்கிச் வந்தது தெரியவந்தது. மேலும் அவரிடம் இருந்து 50 கிராம் எடை கொண்ட 50 கஞ்சா பொட்டலங்கள், பட்டாக்கத்தி, நாட்டு வெடிகுண்டு ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். பிடிபட்ட நபர் மீது ஏற்கனவே  2 கொலை முயற்சி வழக்குகள் உள்ளது. இவர். எதற்காக நாட்டு வெடிகுண்டுகளை எடுத்துச் சென்றார்? யாரையாவது கொலை செய்ய  திட்டம் தீட்டினாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரிக்கின்றனர்.    

Related Stories: