சென்னை: மின்சார கணக்கீடு செய்யும் போது, இரண்டு இரு மாதங்களுக்கும் சேர்த்து மின்சார பயன்பாடு கணக்கிட்டு, முந்தைய மாத கட்டணத்தின் அடிப்படையில் செலுத்தப்பட்ட தொகையை கழித்து விட்டு, மீதி தொகைக்கு பில் செலுத்த வேண்டும் என மின்சார வாரியம் அறிவித்தது. இதை எதிர்த்து, முந்தைய மின் அளவீட்டின் அடிப்படையில், முதல் 2 மாதங்களுக்கான கட்டணத்தை தனி ‘பில்’லாகவும், மீத யூனிட்களை அடுத்த இரு மாதங்களுக்கான ‘பில்’லாகவும் நிர்ணயித்து தனித்தனி பில்கள் தயாரிக்க உத்தரவிடக் கோரி தேசிய மக்கள் சக்திக் கட்சித் தலைவர் எம்.எல்.ரவி ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.