சென்னை: சென்னையில் உள்ள சந்தைகளில் இரண்டு நாட்களில் சிசிடிவி கேமிரா பொறுத்தப்படும். தற்போது 2 பேருக்கு இரண்டாவது முறையாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது என்றும் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்தார். சென்னையில் உள்ள சந்தைகளில் தனிமனித இடைவெளி மற்றும் மாஸ்க் அணிதல் உள்ளிட்ட விதிகளை பின்பற்றுவது தொடர்பாக வணிகர் சங்கங்களுடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் துணை ஆணையர் மேகநாத ரெட்டி, வருவாய் அலுவலர் சுகுமார் சிட்டிபாபு ஆகியோர் கலந்து கொண்டனர். இதன்பிறகு மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் செய்தியாளர்களிடம் கூறியதாவது: