பாபநாசம்: தஞ்சை மாவட்டம் பாபநாசத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது கபிஸ்தலம். வழியில் குட முருட்டி, திருமலை ராஜன் ஆறு, அரசலாறு, காவிரி உள்ளிட்ட 4 பாலங்கள் உள்ளது. இந்நிலையில் காவிரி ஆறு பாலத்தில் காவிரிக் கரையில் இறைச்சி கழிவு உள்ளிட்ட குப்பைகள் கொட்டப் படுவதால் சாலையில் துர்நாற்றம் வீசுகிறது. வாகன ஓட்டிகள் மூக்கைப் பொத்தியப்படி செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. அறுபடை வீடுகளில் ஒன்றான சுவாமிமலைக்கு செல்பவர்கள் இந்தப் பாலத்தை கடந்துத் தான் செல்ல வேண்டும். இதேப் போன்று திருவையாறு, கபிஸ்தலம், மேல கபிஸ்தலம், உம்பளாப்பாடி உள்ளிட்ட கிராமங்களுக்கு இந்தப் பாலத்தை கடந்து தான் செல்ல வேண்டும்.