சென்னை: தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் வழங்குவது திடீரென்று நிறுத்தப்பட்டுள்ளது. நகைக்கடன் வழங்குவது நிறுத்தப்பட்டதால் நடுத்தர, ஏழை மக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நகைக்கடனை நிறுத்துமாறு கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். செல்போன் குறுஞ்செய்தி மூலம் கூட்டுறவு சங்கங்களுக்கு உத்தரவிட்டுள்ளார் இணைப்பதிவாளர்.