கொரோனா தடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

சென்னை:சென்னையில் கொரோனா தடுப்பு பணிக்கு நியமிக்கப்பட்ட  ஐபிஎஸ் அதிகாரிகளை மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  அதன்படி, சென்னை வடக்கு மண்டலத்துக்கு சிபிசிஐடி ஐஜி கபில்குமார் சி.சாரட்கர், கிழக்கு மண்டலத்துக்கு ஐஜி (பொது) பவானீஸ்வரி, தெற்கு மண்டலத்துக்கு சென்னை (ஆபரேஷன்) ஐஜி பாஸ்கரன், மேற்கு மண்டலத்துக்கு சென்னை பொருளாதார குற்ற தடுப்பு ஐஜி கணேசமூர்த்தி, தண்டையார்பேட்டை மண்டலத்துக்கு சென்னை அமலாக்கப்பிரிவு எஸ்பி எஸ்.மணி, ராயபுரம் மண்டலத்துக்கு திருவண்ணாமலை ஏஎஸ்பி குணசேகரன், திருவிக நகர் மண்டலத்துக்கு விருதுநகர் மதுவிலக்கு பிரிவு டிஎஸ்பி ஸ்டீபன், அண்ணாநகர் மண்டலத்துக்கு சென்னை ஐபிஆர் எஸ்பி ராமர்,

தேனாம்பேட்டை மண்டலத்துக்கு வீராபுரம் மூன்றாவது பட்டாலியன் உதவி கமாண்டன்ட் ரமேஷ், கோடம்பாக்கம் மண்டலத்துக்கு சென்னை பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு டிஎஸ்பி யுவராஜ், ஆலந்தூர் மண்டலத்துக்கு சென்னை பொருளாதார குற்ற தடுப்பு பிரிவு டிஎஸ்பி வளவன், அடையாறு மண்டலத்துக்கு ஊனமாஞ்சேரி தமிழ்நாடு போலீஸ் அகாடமி எஸ்பி ஜெயச்சந்திரன், காஞ்சிபுரம் மாவட்டத்துக்கு சைபர் கிரைம் பிரிவு எஸ்பி சரோஜ்குமார் தாகூர் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Related Stories: