சென்னை: ஐந்து சார்பதிவாளர்களை பணிமாறுதல் செய்து பதிவுத்துறை செயலாளர் அரசாணை வெளியிட்டுள்ளார்.தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பணியாற்றி வந்த 5 சார்பதிவாளர்களை பணியிட மாற்றம் செய்து பதிவுத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, குன்றத்தூர் சார்பதிவாளர் முத்துச்சாமி சாத்தூர் சார்பதிவாளராகவும், திருத்துறைப்பூண்டி சார்பதிவாளர் கண்ணன் நீலாங்கரை சார்பதிவாளராகவும், ஸ்ரீவில்லிப்புத்தூர் சார்பதிவாளர் நவீன் குன்றத்தூர் சார்பதிவாளராகவும், கூடுவாஞ்சேரி சார்பதிவாளர் தாணுமூர்த்தி திருவொற்றியூர் சார்பதிவாளராகவும், ராமநாதபுரம் இணை 2 சார்பதிவாளர் இளங்கோவன் வெளிப்பட்டினம் சார்பதிவாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.