சென்னை: கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் 800-க்கும் மேற்பட்ட தமிழக மருத்துவ மாணவ-மாணவிகளை, தமிழக அரசு விரைந்து மீட்க வேண்டும் என நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார். ஏற்கனவே நீண்ட காலமாகக் குடும்பத்தைப் பிரிந்து இருந்ததாலும், இப்பேரிடர் காலத்தில் ஆதரவற்று வெளிநாட்டில் சிக்கித் தவித்து வருவதாலும் வெகுவாக பாதிக்கப்பட்டுள்ள மாணவ, மாணவியரின் உலல்நலனையும், மனநலனையும் கருத்தில் கொண்டு தமிழக அரசு உடனடியாக கவனமெடுத்து அவர்களைப் பாதுகாப்பாக மீட்டு விரைந்து தமிழகம் அழைத்து வர ஏற்பாடு செய்யுமாறு வலியுறுத்தியுள்ளார்.