கொடைக்கானல்: குடியிருப்புப் பகுதிகளில் நடமாடும் காட்டுயானைகளால் கொடைக்கானல் பகுதி மக்கள் அச்சத்தில் உள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் உள்ள பெருமாள்மலையை அடுத்து பேத்துப்பாறை, அஞ்சுவீடு, கணேசபுரம் ஆகிய குடியிருப்புப் பகுதிகள் உள்ளன. இப்பகுதிகளில் கடந்த சில நாட்களாக காட்டுயானைகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இவை, அப்பகுதியில் விளைநிலங்களில் உள்ள பயிர்களை நாசம் செய்கின்றன. தற்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நடமாடுவதால், உயிர் பயத்தில் பொதுமக்கள் வெளியே வர அச்சப்படுகின்றனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.