கோவை: கொரோனா ஊரடங்கில் கந்துவட்டி கொடுமைகள் தலைதூக்கியுள்ளதால் பல்வேறு ஊர்களில் தற்கொலைகள் அதிகரித்து வருகின்றன. கந்துவட்டி வசூலிப்பவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கோவை மாவட்டம் மண்ணூரில் கந்துவட்டி கொடுமையால் கூலி தொழிலாளியான மூர்த்தி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டார். அதே ஊரில் வசிக்கும் தனிநபருக்கு சொந்தமான தோட்டத்தில் மூர்த்தி கூலி வேலை செய்து வந்துள்ளார். கூலிக்கான முன்பணத்தை கொடுத்துவிட்டு கொத்தடிமை போல் மூர்த்தியிடம் வேலை வாங்கியதாக தெரிகிறது. தற்போது கொரோனா ஊரடங்கால் வேளைக்கு செல்லாததால் கொடுத்த பணத்திற்கு கந்துவட்டி கேட்டு மிரட்டி அடித்து உதைத்ததாக கூறப்படுகிறது.