மேற்குவங்க அரசு தடை காரணமாக 19ம்தேதி வரை கொல்கத்தா விமான சேவைகள் ரத்து: டிக்கெட் கட்டணம் திரும்ப தரவில்லை

சென்னை: சென்னை-கொல்கத்தா- சென்னை இடையே 10 விமான சேவைகள் வரும் 19ம் தேதி வரை ரத்து  செய்யப்பட்டுள்ளது. மேற்கு வங்க மாநில அரசு கொரோனா வைரஸ் தங்கள் மாநிலத்தில் பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக, கொரோனா வைரஸ் அதிகமாக உள்ள சென்னை, டெல்லி, மும்பை ஆகிய இடங்களிலிருந்து விமானங்கள் தங்கள் மாநிலத்திற்கு வர தடைவித்துள்ளது. நேற்று முதல் 19ம் தேதி வரை தடை அமலில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து காலை 7.35 மணி, பகல் 2 மணி, மாலை 6 மணி, மாலை 6.30 மணி, இரவு 10 மணிக்கு சென்னையிலிருந்து கொல்கத்தா செல்லும் விமானங்களும், அதேபோல் கொல்கத்தாவிலிருந்து சென்னை வரும் 5 விமானங்களும் மொத்தம் 10 விமானங்கள் நேற்று ரத்து செய்யப்பட்டன.

Related Stories: